என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 12 டிசம்பர், 2013

எம் தேவன் !

பதினாறு பரி 

பூட்டி; முலாமிட்ட


தேரேறி ; நகைத்த


முகம் கொண்டு 


வருவான் 


எம் தேவன் !

காலனையும் அவன்


வடம் பிடிப்பான்;


என்னையும் அவன் 


தடம் பிடிப்பான்; 


என் குலம் காக்க


வந்த எம் அய்யனே ! 


நித்தம் பித்தனாய்


சித்தம் கொள்வேன் !


வாழ்வும் வளமும் 


இனி உன் வசமே தேவா !!!



என் காதல் !

என் மொழி

மீதான காதல் ! 

என் சுயநிலையை 

பதப்படுத்தும்...

என் அவளின்

மீதான காதல் ! 

என் வாழ்நிலையை

மிதப்படுத்தும்... 

இரண்டுமே என்னை 

நிலைப்படுத்தும்.

ஆள நினைக்கிறாயா !

என்னை 

ஆள நினைக்கிறாயா !

அன்பெனும் ஆயுதம் தறித்து வா,

அடக்க நினைக்கிறாயா !

வீரமெனும் வில்லை வளைத்து வா,

எனை ஆள்வதற்கும், 

அடக்குவதற்கும்

வெற்றிக் கொள்வது அவசியம்.

என்னடா வருத்தம் !

சுழியம் முதல்

ஒன்பது வரைதானே

எண்கள்,

அதை சுற்றித்தானே

லட்சங்களும்,

கோடிகளும்.

பிறகு என்னடா !

வருத்தம் உன்னை

சுற்றித்தானே உலகம்,

உன்னையே முன்னும்

பின்னும் திருப்பி

போடு நண்பா !

உன்னையறியும் உலகம்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

ஒரு பயணத்திற்கான புறப்பாடு...




நீண்ட
நெடுந்தொலைவு
பயணத்திற்கான
புறப்பாட்டுக்கு
தயார் நிலையில்
பயணித்து கொண்டிருந்தேன்
கட்டுச் சோற்றை
நம்பிய பயணமல்ல
இது நடைப் பாதை
வணிகத்திற்கான
பயணம்...
பயணத்தில் சற்றே
களைப்புற்றாலும்
தோல்வி நிலை எட்டி விடக்கூடும்...
கடந்த தொலைவை
கணக்கிட்டு கடக்கும்
தொலைவை கணக்கிட இயலாது...
ஏனெனில் இது
இலக்கில்லாத பயணம்;
நட்பாய் வருவோரும்
துணையாய் தொடர்வோரும்
இங்கு நிலையில்லை;
நிதர்சனமான நிலையில்
சுயநிலை மட்டுமே
என்னில் பயணிக்கும்....

வெள்ளி, 8 நவம்பர், 2013

அச்சம் எதற்கடா...

திரண்டு வா
தமிழா !
மிரண்டு போவான்
எவனும் !
முற்றத்தில்
முடங்கினால்
நிகழாது மாற்றம்,
அச்சத்தில்
ஆர்பரித்தால்
அனாதையாய்
போகுமடா இனம்....
எழுஞாயிரை கைக்
கொண்டு எழுப்பு
பகைவரின் கொட்டத்தை
முடக்கு
இடறொன்று இல்லாமல்
நம்மினத்தை தொடக்கு...
நீதான் நானடா
நான்தான் நீயடா
பின்
அச்சம் எதற்கடா...



சனி, 26 அக்டோபர், 2013

'வேலன், சோழன், ஈழன் '

சிந்திக்கும் 
போதே 
நிந்திக்கும் 
அதுதான் 
சரித்திரம்;
'அன்றோ' 
அதை 
படைத்திட 
நரம்பு 
புடைத்திட 
புசங்கள் 
துடித்திட 
வேல் கொண்டு 
நின்றவனே 
வேலன் ;
வாள் வீசி 
சென்றவனே 
சோழன் ;
துவக்கில் குறி 
வைத்தவனே 
ஈழத்து வீரன் ;
இத்துனையும் 
நீதான்...
'இன்றோ'  
கொட்டடி 
அடிமையாய் 
சோற்றுக்கு 
வாழ்வாயா !
உணர்வு 
கொள்வாயா !
சொல் நீ ....

வியாழன், 24 அக்டோபர், 2013

விலை யாதென கேட்டேன்..

விலை யாதென 
கேட்டேன் 
எப்பொருளுக்கு 
என்றுரைத்தான் 
வியாபாரி 
உள்ள பொருள் 
அத்துனையும் என்றேன்;
உற்றத் தொகை 
உள்ளதா சந்தேகித்தான்
உள்ளத் தொகையை 
சரிபார்த்து உண்டென்று 
சொன்னேன்..
வியாபாரி வியாபாரம் 
உனக்கில்லை என்றே 
நடைக் கட்டினான்....
அவனே இறைவன்
நானே மனிதன்....  

புதன், 16 அக்டோபர், 2013

தமிழ்ச்சாதி...




கைக் கொண்டு 
இரும்பை 
வளைத்திட்ட தமிழ்ச்சாதி 
நாணல் போல் 
வளைந்திடவா நியதி !
கரையான் கூட்டில் 
கருநாகம் புகுந்திட
வாழ்வறியா போனச் சாதி

போரெடுத்து  
வேலெடுத்து 
வாளெடுத்து வீசி 
கயவர் தம் 
தலைக் கொய்த தமிழ்ச்சாதி 
துப்பாக்கி முனையில் 
வீழ்ந்திட்ட போதும் 
இல்லாமல் போனதே நாதி...

சமுத்திரம் கண்டு 
சரித்திரம் படைத்து 
கொலோன்றிய தமிழ்ச்சாதி 
சமுத்திரத்தில் 
மீனுக்கிறையென 
வீழும் மீதமே !
எவ்விதம் நிகழும் 
எம்மினத்தின் மீட்சி....

பட்சிகளும்
தமிழ்ச் சாதியும் 
ஒன்றானதே ! 
இருக்க இடமொன்று 
இல்லாமல் போனதே !
என் செயும் எம் தமிழ்ச்சாதி
அறிந்தோர் ஒருவர் உரைப்பீரோ...




செவ்வாய், 8 அக்டோபர், 2013

சக்தியே;

என்னில் யாதுமாகி
நின்றவளே
எம்மில் வேதமாகி
ஒலித்தவளே
நெஞ்சில் திறமாகி
வாழ்வில் உரமாகி
என்னை வலியோனாய்
உருவெடுக்க செய்த
சக்தியே;
அன்னையே;
சிவத்தில் பாதியாய்
என்னில் மீதியாய்
இருந்திடுவாயே...


இன்றியமையாதவன்...

இன்றியமையாதவன்

எம் வாழ்வோடு ஒற்றி

ஒருங்கிணைந்தவன்

திக்கற்று தவித்தோனுக்கு

திசையறிவித்தவன்

வக்கற்று நின்றோனுக்கு

வாழ்வளித்தவன்

இவனே என்னில்

இன்றியமையாதவன்

எம்மில் அசையாமல்

வீற்றிருக்கும்

'தன்னம்பிக்கையே'அவன்,

அவனின்றி நான் அணுவும் அசைவதில்லை...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

'நல்லோரின் கரம் வலுக்கும்'

தர்மம் தலைகவிழ்ந்து 
வீழ்ந்துத்தான் போகுமா...
அறம் செய இலார் 
துர்காரியம் செயவே 
பெரும் பேரிடர் நிகழ்த்தவே 
அதர்மம் சிரம் உயர்த்தும்
அப்பேரிடரில் வீழும் தர்மம்...
தர்மத்தின் வாழ்வுதனை 
சூது கவ்வும்;
நிலையான செயலொன்று இலவே
அதையொற்றி அதர்மத்தின் 
வாழ்வும் நிலையானது இலவே;
நற்காரியம் புரிந்திடவே 
'நல்லோரின் கரம் வலுக்கும்' 
சமயமென்று தர்மம் 
சிரம் நிமிரும் மீண்டும்;
தருமம் மீண்டும் அதனை வெல்லும்
கயவர்களின் கயமை அகலும்....   

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிந்தைக்குள் சந்தை...

எண்ணிலடங்கா 
ஒலிச் சித்திரங்கள் 
செவி மடலில்...
ஆங்காரமாய் கோட்டான்களும் 
ஆசுவாசமாய் குயில்களும் 
ஆங்கங்கே அசை மடங்குகின்றன...
விமர்சிக்கும் மூடர்களும் 
யாசிக்கும் வீணர்களும் 
நேசிக்கும் நேசர்களும் 
வியாபித்து விரைகின்றனர்...
சிந்தையோ தனிமையில் 
செயலோ வெறுமையில்...
நேசிப்பவரும் துரோகிப்பவரும் 
இனம் காண இயலாது 
ஒற்றை வரிசையில்...
வாழ்வின் திசை தெரியாது 
சிந்தைக்குள் சந்தை நிலைமை.... 

வியாழன், 19 செப்டம்பர், 2013

ஆளப் பிறந்தவன்...

எள்ளி நகையாடும்
நன்றி கெட்டோரை
சற்றே நினைக்கிறேன்
அஃதே சற்றே
நகைக்கிறேன்,
எச்சத்தை உண்டு வாழும்
நல்லோரை கண்டு
மீண்டும் நகைக்கிறேன்...
வீழ்ந்தெழுவதில் சாதனை
படைத்தவன் நான்...
ஆக்கப் பிறந்தவன் அழிவதில்லை
ஆளப் பிறந்தவன் அண்டி நிற்பதில்லை...



இதுவே எம் சாராம்சம்.....

புதன், 18 செப்டம்பர், 2013

சாரல் வீசாயோ...

சில்லென்று சாரல் வீசாயோ 
எம் தாயே - தேகம் தன்னில் 
சில்லென்று வீசாயோ -  
அணையா அக்கினி 
சிந்தைக்குள் கருக் கொண்டது 
தேகத்தை கருவாய் கொண்டது 
இனமாய் 
மொழியாய் 
உறவாய் 
உதிரமாய் 
எம்மிலே அனைத்தும் 
நிலையாய் நிலைக் கொண்டது...
சாம்பலாகும் முன் சரித்திரம் 
படைத்திட எம் தாயே 
அணைத்திட சாரலாய் வீசாயோ...

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தமிழன்னையே....

உணர்வில் உருகி
உயிரில் கலந்தாயம்மா நீ
என் ஊணில் அணுவாகி
உதிரத்தில் உரைந்தாயம்மா நீ
அகிலத்தில் அடைந்திட்ட 
பொழுதும், மண்ணுக்குள் 
புதைந்திட்டப் பொழுதும் 
உன் பெயர் சொல்லியே திரிவேனம்மா...
அன்னையாய்
ஆசானாய்
உற்றத் தோழியாய் எம்மில்
நிலைத்திட்ட தமிழன்னையே
நீயே எந்தன் வாழ்வின் விளக்கம்...

சனி, 24 ஆகஸ்ட், 2013

கோழையில்லை

ஒதுங்கி செல்வதால் 
கோழையில்லை 
விலகி நிற்பதால் 
விட்டு விடுவதில்லை
இது, 
கனி பழுப்பதற்கான
காத்திருப்பு...
சவடால்கள் சவால்கள் இல்லை 
சவால்கள் சத்தமிடுவதில்லை,
எனக்கான சந்தர்பத்தை 
கட்டமைக்கும் நேரம் இது...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சிதிலடைந்த தேசம்

தித்திக்கும் கனவோடு 
எத்திக்கும் நிறைவாகி 
உதிரத்தில் உருவெடுத்த 
எம் சுதந்திரத்தின் 
சூத்திரம் உணராமலே 
சிந்தைக்குள் சிதறல்...
கட்டமைத்த தேசம்
முற்று பெறாமலே 
சிதிலடைந்து
முற்றுப் பெறாத முடிவுகள் 
முடிவுக்கு வராத வழக்குகள்
மட்டுமே நிரந்தரம்...
வக்கற்று நின்றோரை 
கரை சேர்க்க 
வழி இல்லா தேசம்
வல்லரசாகும் கனவோடு...




புதன், 14 ஆகஸ்ட், 2013

மீண்டும் ஒரு அரங்கேற்றம்

இனத்தில் கருவாகி 
செருக்கில் உருவாகி 
உணர்வை உதிரத்திலும் 
நெருப்பை நெஞ்சிலும் 
சுமந்திட்டவன்
சுற்றத்தின் பார்வையில் 
முரணானவன்
சிந்தை சினத்தில் 
முதலானவன்...
இத்தருணம் 
லட்சியத்தில் லட்சத்தை 
தொலைத்து 
வெறுமையை மிச்சமாக 
கொண்டு  
வாழ்நிலையில் 
கடைநிலையை கைக் கொண்டு 
பயணிக்கிறேன்... 
எம்வாழ்வில் மீண்டும் 
ஒரு அரங்கேற்றம் நிகழும்...
அதுவரை 
ஐந்தாம் படையில் அணி சேர்வேன்
நிர்ணயித்த இலக்கு தூரமும் இல்லை....

சனி, 8 ஜூன், 2013

காகிதமும் கிறுக்கனும்

கிறுக்கனின் உள்ளத்தின் 
கிளறல்கள் கிறுக்கலாய் 
அது 
வடிவமாய் 
உருவமாய் 
சிற்பமாய் 
உருவெடுக்கும்  காகிதத்தில்....
கிறுக்கன்
இவன்  
கோணங்களில் மாற்றம் 
வர்ணங்களில் ஏற்றம் 
சிந்தனையில் சீற்றம்...
சிந்தனை சிதறல்கள் 
ஒருங்கிணைந்த 
காகிதமும் கிறுக்கனும்...

புதன், 22 மே, 2013

இனம் வாழ....


எம் தேசத்து 
ஆற்றங்கரைகள் போலவே 
எம்மக்களும் காய்ந்த 
நிலையிலே..
படுகையின் பள்ளங்களில் 
தேங்கும் நீரும் 
நதிகளில் காணமல் 
போனதே....
அழிவில் 
முதற்கண்  மொழி 
வழிமொழியும்  இனம்  
பின் தொடரும் இயற்கை...
வீழ்வதற்கு ஒன்றுமில்லை
இனி எழுவதற்கு 
வானம் மட்டுமே எல்லை...
மொழி வாழ யாழ் மீட்டு 
இனம் வாழ வாள் தீட்டு 
நிலம் வாழ ஏர் பூட்டு...
சிந்தையில் செய்வதறியா
நிலைக் கொண்டால் ! எம்மினமே 
சத்தமில்லாமல் மடிந்து போவாய்...
நிலைமாறும் முன் நிலைமாறு...



செவ்வாய், 14 மே, 2013

எதிர்த்து நில் ...

இமை மூடி 
இருள் கூடி 
வழி தேடி 
மனம் வாடி 
வாழும் தோழா உணர்வாயா 
உன் உள்நிலையை...!
அடங்கிடாத அரிமாவும் 
அணைந்திடாத தணலும் 
உன் வசம் ,
உனையன்றி இனி எவர் வசம்...
எழுந்து நில் 
துணிந்து நில் 
எதிர்த்து நில் 
எதிர்த்தது காலன் எனினும்..
உயிர் நிலை கண்டு 
அச்சம் எதற்கு -அது 
துச்சம் நமக்கு...
வீழ்ந்தது போதும் 
வீரியம் கொண்டு எழு
இனி ஏற்றமே...

திங்கள், 6 மே, 2013

வாழையடி வாழையாய் ....


வாழையடி வாழையாய் 
தளைத்த எம் தமிழினம் 
இன்று சாதிகளாலும் 
மதங்களாலும் 
கருகிய நிலையில் 
அரசியல் அரிவாளால்
வெட்டு பட்டு போனதே...
கொத்து கொத்தாய் 
குலை குலையாய் 
கூட்டம் கூட்டாமாய் 
செழித்த எம்மினம் 
தன்னந்தனி ஆனதே...
வீழ்ந்து விட்ட விதையில் 
சொட்டுநீர் பட்டு விடாதா !
இனியொரு நிகழ்வில் 
அதிசயம் நிகழ்ந்திடாதா !
"இனியொரு விதி செய்வோம்"
என்றிட்ட எம் நாட்டு புலவன் 
வாக்கு பலித்திடாதா !
கன்றுகளோடு வாழை தளைத்திடாதா !
ஏக்கத்துடன் நடை பயில்கிறேன் 
எம் தமிழ் தோட்டத்தில்...










சனி, 4 மே, 2013

தோட்டாக்களில் தோற்றம் மாறியவன்.



ஆணையிட்ட மன்னனுக்கு 
யானை மீதேறி போரிட்ட தமிழனவன்...
காலாட்படையில் வேல் தாங்கி
இமயத்திலும் புலிக்கொடி ஏந்தியவன்
முகலாயனை குலைநடுங்க
செய்திட்ட சோழ மைந்தனவன்
கால மாற்றத்தில் உருக்குலைந்த 
எம்மினத்தின் அடையாளம் 
வாழும் வேலும்..
மாய்ந்த விலாசத்தை 
மீட்டெடுத்தான் ஈழத்தின் சோழன் 
வாளுக்கு துவக்கு கையில் 
வேலுக்கு இவன் வேலுக்கு பிள்ளை 
தமிழனும் அவனும் வேறேதும் இல்லை 
இவன் தோட்டக்களில் தோற்றம் மாறியவன்...
ஆயுதம் மாறியதே அன்றி இலக்கு அல்ல
ஆதியிலும் சரி மீதியிலும் சரி 
வீரமே எம் இனத்தின் அடையாளம்
போரும் ஏறும் மட்டுமே எனது குலத்தொழில்..



சனி, 27 ஏப்ரல், 2013

தென்னாடுடைய சிவனே ..



ஆலகாலத்தை கண்டத்தில் 
சுமந்தான்; இவனே ஈசன் 
எம் பேரினத்தின் நேசன்,
இனம் காக்கும் பொருட்டே 
ஆனான் சிவம்; அன்பிலும் சிவம் 
பகை முடிக்க ஆடினான் 
ருத்திரம் இவனில் எழுந்ததே 
ரௌத்திரம்...
பிட்டுக்கு மண் சுமந்தான்
ஈசன்;இவனோ மண்ணுக்கு 
இனத்தை சுமந்தான் 
துவக்கெடுத்து துவக்கினான் 
திருவிளையாடலை...
புலிகள் புடைசூழ தர்மத்தின் 
தலைமகன் தலையெடுத்தான்
எதிரிகளின் தலை எடுத்தான்
இனத்தில் களையெடுத்தான்..
தமிழின யுத்தம் தொடங்கினான் 
சற்றே அதர்மம் தலை தூக்கியதே
தவிர தர்மம் வீழாது..
மீண்டும் 
எம்மினத்தின் ஈசன் வருவான் 
பலியெடுக்க புலிகள் வரும்
'பிரபா' தாண்டவம் தொடரும்....

சிந்தை கொண்டேன்..



மண்ணில் மரணிக்கவே 
மனிதம் கொண்டேன்-ஆயினும் 
சிந்தையிலோ தேவைகள் 
சில்லறையில் அத்துனையும் 
அடங்கிப் போகுமே கல்லறையில்...
விதை நெல்லை பசிக்கு புசித்திட்டால் 
வீசும் காற்றிலும் பஞ்சம் வீசாதா..
நாற்றாங்காலில் வசித்திட்டால் 
நாடும் நசாமாய் போகாதா.. 
ஆலகால விசமொன்று 
அமிர்தமாய் இனிக்கிறதே நாவில் 
மனிதம் பயணிக்கிறதே சாவில்...
பாட்டனோ நூறில் 
அப்பனோ அறுபதில்
நானோ நாற்பதில் 
நாளை எம் பிள்ளையின் சாவை அறிவேனோ....

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பிரபாகரன்

என் சுய நிலையின் 
ஆதியும் அந்தமும் உன் பொருட்டே
நீயே என் அடையாளம்...
உயிர் நிலையே வாழ்நிலை
கணக்கென்று கொண்டவனில் 
இன உணர்வை உள்தாழிட்டு 
எம் விடுதலை வேட்கையை 
உடைத்து வரச் செய்தவன் நீ...
எம் தன்னிலை விளக்கத்தை 
ஒற்றை வரியில் உரைப்பேன் 
---------------பிரபாகரன்----------------



செவ்வாய், 2 ஏப்ரல், 2013

விசித்திரமானவன்

ஒரு பொழுதும் வெற்றி 
 
எமக்கு அவசியமில்லை - எம்மில் 
 
சமாதானமும் சண்டையும் 
 
என்றும் நிலைக் கொள்ளும்.
 
முதலில் தோற்பதும்,
 
விளிம்பில் வெல்வதும் என் வாடிக்கையாகும்..
 
எனவே தோல்விக் களைப்பும் 
 
வெற்றிக் களிப்பும் எம் 
 
உள்ளத்தில் ஒருசேர பயணிக்கும்....
 
பரிவு கொள்வோரும் பகைக் 
 
கொண்டோரும் எம்மில் 
 
நிரந்தரம் செய்வர் - எம்மை 
 
வீழ்த்தி வெற்றி கொண்டோரும் ,
 
எம்மில் வீழ்ந்து தோல்வி 
 
கண்டோரும் நட்புக்கொள்வர்...
 
அமிலமும் அமிர்தமும் அகத்தில் கொண்டவன் ,
 
விடைகளுக்கு வினாவளித்து
 
விளையாட்டும் விபரீதமும் ஒன்றிணைந்த
 
நான் சற்றே  விசித்திரமானவன்....

வெள்ளி, 8 மார்ச், 2013

விழியில்லா விண்மீன்கள்....


இம்மைக்கும் மறுமைக்கும் 
வாழ்க்கைப் பட்டு
ஆயிரமாயிரம்  ஆண்டுகளாய் 
அடிமைத் தொழிலுக்கு ஆட்பட்டு 
பந்தங்களில் பரிதவித்து பதறிச்  
சிதறும் பெண்மையே...
இன்றளவும் விழியிருந்தும்
குருடாய் உன் பார்வை...
ஆயிரம் கைகளில் ஆதவன் 
மறைந்தே போனது இங்கே ...
ஆரியனின் சூழ்ச்சியில் 
வீழ்ந்தது பேதையவள் எழுச்சி...
எனினும் விண்மீன்களை 
போலவே சொலிக்க மட்டுமே 
இங்கே பெண்மையின் தேடல்....
இந்நிலை மாற்றம் வருமோ !
பாரதியின் வாய்மை பலித்திடுமோ !
எம் தமிழ்க்குலம் கண்ட 
மறத்தமிழச்சியை மாறாமல் கண்டிடுவேனோ....

புதன், 27 பிப்ரவரி, 2013

இந்தியனே கேள்....

எங்களில் சாதியுண்டு 
சண்டையுண்டு 
மதமுண்டு 
மோதலுமுண்டு 
பிரிவினைகள் பலவுண்டு ,
நிச்சயம் சொல்கிறேன் கேள் இந்தியனே !
எங்கள் பிரிவுகள் பாதியிலே தவிர 
ஆதியிலே அல்ல ,,,
தமிழச்சியின் தவப்புதல்வர்கள் 
நாங்கள் தமிழர்கள்....
துண்டாடிக்  கொண்டாடி விடலாம் 
எண்ணிவிடாதே ..
பாரதத்தின் பாதம் நாங்கள் ...
நாங்கள் சற்றே அசைந்தால் 
பாரதம் கவிழும், தேசம் உடையும்...
நிலைகுலைந்து போகும் முன் யோசி...
எங்கள் ஈழத்தில் தமிழ் தேசியக்கீதம் வாசி....


திங்கள், 25 பிப்ரவரி, 2013

மரணத்தை நேசிக்கிறேன்...



ஆழி குளமாகி ஏரி தரிசாகி 
நீரின்றி அமையலாம்  உலகு
அன்றே வீதியெங்கும் பூக்கோலம் 
நாடெங்கும் நர்த்தனங்கள் 
திக்கெட்டிலும் திகழ்ந்திடும் அமைதி....
இருக்கும் இடத்தில் 
இல்லையென்ற விதியை 
கொண்டாடும் உலகம்...
உள்ளமதில் உள்ளதை கூற 
கபடமதை கலந்துரைக்கும்....
பற்றோடு பற்று வைக்க 
ஏமாற்றத்தை பரிசளிக்கும்...
நேசித்து வாழ உயிரற்று போனதே மனிதம்,,,
இனி நேசித்து வாழ நிலையில்லை 
ஆகவே நிலையான 
மரணத்தை மட்டும் நேசிக்கிறேன்...

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

படித்து விட்டேன்...


படித்து விட்டேன் எனது முன்னரையை
புதினத்தின் முடிவை நோக்கியே எனது புரட்டல்..
பக்கத்திற்கு ஒரு  கதை மாறும் 
அதில் நாயகன் நான்தானே...
பக்கத்தின் விறுவிறுப்பு 
மூடி வைக்க விருப்பமில்லை
புதினத்தை படித்து முடித்து விட ஆவல்...

எடுத்து விடு தோழனே...

எடுத்து விடு தோழனே
கையில் ஒரு ஆயுதம்....
சித்தம் கலங்கி 
செத்து பிழைப்பதை விட 
கொலைத் தொழில் பழகி விடு...
அடங்கி தவித்து 
அஞ்சி நின்றது போதும்
அச்சம் உனக்கான குணமல்ல...
தோழா நீயும் 
நித்தம் சுற்றம் பாரடா...
இழிவுகள் உன்னை சுற்றி 
விழிகள் திறந்து காணடா...
தண்ணீரும் தடைப் படும் 
அணைகளும் உடைப் படும் 
சொந்தங்களோ குருதிக் கலரியில்..
எத்துனை அவலங்கள் கண்டிடு
உந்தன் பேராற்றல் கொண்டே வென்றிடு....
பெண்பிள்ளைகளை கண்ணென்று காத்திடு...
ஆதலால் தோழா 
ஆயுதம் ஒன்றை தாங்கிடு...

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

எரிமலை சிதறிடும் ....



எனை என்னவோ நினைத்தாய் 
சிறு பொடியனென்று உரைத்தாய் 
அஞ்சிடுவேன் , கூத்தாடி 
கெஞ்சிடுவென் என சிந்தித்தாயோ...
ஆல் போல முளைத்திடுவேன் 
வாழையாய் தளைத்திடுவேன் 
விதையாய் விழுந்திடுவேன்....நான் 
இயற்கையுடன் இயைந்து போனவன்
சீற்றம் கொள்வேன் 
சூழ்நிலையில் மாற்றம் கொள்வேன்....
நிமிர்ந்திட வானம் வரையளவு 
துணிந்திட ஆழம் கடலளவு...
அஞ்சி பிழைத்திட அற்பன் 
நானென நினைவு கொண்டாயோ !!!
அன்றே எரிமலை சிதறிடும் ....

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

இதயத்தின் இனிப்பே.......


தமிழே , அமிழ்தே 
உதிரத்தில் உறைந்திட்ட 
உயிரே ; உனை 
நினைந்தால் தொட்ட 
காரியமும் கைதனில்...
இதயத்தின் இனிப்பே
உண்டார்க்கு சுவை ஆறு - அதில் 
உனை கொண்டார்க்கு ஏழு...
நித்தம் மனதில் தேன்சொரியும்...
கண்களில் சித்தம் 
தெளிந்து நீர் வடியும் ...
பிறந்திட்ட இச்சென்மம் 
ஏழேழு பிறவிக்கும் போதும்...
மண்ணுக்கு ஊண் உணவாகினும் 
பெயர் சொல்லும் தமிழனென்று....
எப்பொழுதிலும் உனை சூழும் வஞ்சம் 
திண்ணமே திமிறும் எனது நெஞ்சம்...
சுற்றமும்  சூழ்ச்சி உமை நெரிக்கும்  
எம் கை 'வாள்' அதை முறிக்கும் ...
என்றும் உன்னை சுற்றியே 
என் வாழ்வும் தேடலும் ...

வியாழன், 31 ஜனவரி, 2013

நாடென்பார் ;


நாடென்பார் ; நீதியென்பார் 
நடுநிலையில் அமர்ந்து நான் 
நல்லவ னெனஉரைப்பார்...
உள்மனதில் வஞ்சம் வைப்பார் 
அதில் தீரா வழக்கொன்றை துவக்கி வைப்பார்...
பகுத்தறிவு பேசிடுவார் ; 
பல்லிளித்து சிரித்திடுவார் : நம்பியோரை 
நட்டாற்றில் நிறுத்திடுவார்...
தனித்து தன்னை காட்ட  
இனத்தை முன்னிருத்துவார்....
இவர்களையே தலைவரென 
எம்மக்கள் கொண்டாடிடுவர்....

கை விடேன்...


கொண்டக் காரியம் கை விடேன்...
ஆழச் சிந்தனை செய்தே 
கைக்  கொண்டேன்,,,இனி 
விட்டு விட இயலாது...
கரமிரண்டை முன்னிறுத்தி 
தன்னிலை பரிசோதனை 
செய்யும் தருணம் இதுவே...
எனை விளங்கிக் கொள்ளும் 
பொறுமை என்னிடம் இல்லை....
என்னை விளக்கிச் சொல்ல நேரமும் இல்லை...
ஏனெனில் 
வெல்லுவதும் வீழ்வதும் எம் கையில்...

தேசம் என்னடா

தேசம் என்னடா தேசம் 

தேடிப்பாரடா அதில் நேசம் 
இல்லையென்று சொல்லைத் 
தவிர இருக்காது அவனிடம்...
தொல்லை என்றுநினைத்திடுவான் 
தமிழ்ப்பிள்ளை என்றால் 
சிரித்திடுவான் எள்ளி நகைத்திடுவான்...
ஆற்றுநீரை அணைக்கட்டி தடுத்திடுவான் 
எம்மக்களை எலிக்கறி உண்ண 
வைத்திடுவான்...
வேற்றுமையில் ஒற்றுமைக்கு 
உலை வைப்பான்..சனநாயகத்தை 
சடுதியில் மறந்திடுவான்....இனி 
நிகழாது மாற்றம்...
நிகழ்ந்து விடும் ஏமாற்றம்...


மீண்டும்

காய் இழந்த இளமையில் 

பழத்தின் இனிப்பு...
வீழ்ந்த  விதையில் 
முளைத்தது விருட்சம்..
தடைப் பட்ட நீரில் 
உருவாகும் மின்சாரம்..
வெட்டிய வாழை இலையில் 
படைத்தது அறுசுவை..
உதிர்ந்த இலையில் 
மரத்தின் வசந்த காலம்..
இழந்த அத்துனையும் 
மீண்டும் சக்தி கொண்டு பெறுவதற்கே....
இரவு வணக்கங்கள் நட்புக்களுக்கு.....

புதன், 23 ஜனவரி, 2013

தாழிட்ட கதவு....


மதில் வைத்து 
தன்னில் அடைந்து  
கொண்ட இனியத் தோழா...
கருத்தொன்று சொல்லிடுவேன்
உரைக்க உரியவன் நான்...
நாளொன்று 
தவறாமல் உண்டிடுவாய் 
உளமார உழைத்திடுவாய் 
உண்மை எதுவென 
உணர்ந்திடுவாய்,,,இருப்பினும் 
உள்ளத்தை உள்வைத்து 
பூட்டெதற்கு...
உடைத்திட உன்னில் 
உறுதியுண்டு...உணர்ந்திட 
குருதியில் சுரமுண்டு...
வட்டத்தில் அடைந்திட 
அற்பன் நீயல்ல....அறிவால் 
அளப்பரிய அற்புதம் நிகழ்த்து...
அகன்று அகிலத்தை 
அரையடியில் அளந்து 
ஓரடியில் நிமிர்ந்து நில்,,,
காலுக்குள் பதுங்கியுள்ளது 
பூமி...இனி நீ யாரென்று 
காண்பி..