என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 24 அக்டோபர், 2013

விலை யாதென கேட்டேன்..

விலை யாதென 
கேட்டேன் 
எப்பொருளுக்கு 
என்றுரைத்தான் 
வியாபாரி 
உள்ள பொருள் 
அத்துனையும் என்றேன்;
உற்றத் தொகை 
உள்ளதா சந்தேகித்தான்
உள்ளத் தொகையை 
சரிபார்த்து உண்டென்று 
சொன்னேன்..
வியாபாரி வியாபாரம் 
உனக்கில்லை என்றே 
நடைக் கட்டினான்....
அவனே இறைவன்
நானே மனிதன்....  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக