நூற்றாண்டில் நிகழ்ந்திடாத அதிசயம்
இவரது பிறப்பும் இறப்பும் ஒரே தினத்தில்....
இனி இவர் போல பிறக்க இல்லை வாய்ப்பு...
அது தருணத்தில் எமன் செய்த ஏய்ப்பு....
தர்மதேவதையின் தலைமகன்
இவர்
அண்டியோர்க்கு அள்ளி
கொடுத்து சிவந்த பொற்கரம்...
ஆங்கிலேயனை அதிர செய்தது
இவரது இரும்புக்கரம்....
சாதியில் இல்லை இவருக்கு பேதம்...
தர்மம் மட்டுமே இவர் வாழ்வின் வேதம்...
வங்கத்துக்காரன் ஏற்றுகொண்ட தமை யனாய்
ஆங்கிலக்காரன் அஞ்சி நின்ற சிங்கமாய்....
இவர் சொல்லிய அரசியல் சூசகம்
ஏற்றிருந்தால் இல்லை இன்று யாசகம் .....
தன் தசை நரம்பு எலும்பெல்லாம்
தேசத்தை கலந்து
குருதியில் உறுதியை குழைத்து
இறுதி வரை தனக்கென்று வாழா மனிதரை
வாழையடி வாழையாய் வணங்கி
நிற்றல் எம்மினத்தின் பெருமையாகும்...