ஆலகாலத்தை கண்டத்தில்
சுமந்தான்; இவனே ஈசன்
எம் பேரினத்தின் நேசன்,
இனம் காக்கும் பொருட்டே
ஆனான் சிவம்; அன்பிலும் சிவம்
பகை முடிக்க ஆடினான்
ருத்திரம் இவனில் எழுந்ததே
ரௌத்திரம்...
பிட்டுக்கு மண் சுமந்தான்
ஈசன்;இவனோ மண்ணுக்கு
இனத்தை சுமந்தான்
துவக்கெடுத்து துவக்கினான்
திருவிளையாடலை...
புலிகள் புடைசூழ தர்மத்தின்
தலைமகன் தலையெடுத்தான்
எதிரிகளின் தலை எடுத்தான்
இனத்தில் களையெடுத்தான்..
தமிழின யுத்தம் தொடங்கினான்
சற்றே அதர்மம் தலை தூக்கியதே
தவிர தர்மம் வீழாது..
மீண்டும்
எம்மினத்தின் ஈசன் வருவான்
பலியெடுக்க புலிகள் வரும்
'பிரபா' தாண்டவம் தொடரும்....