என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 8 மார்ச், 2013

விழியில்லா விண்மீன்கள்....


இம்மைக்கும் மறுமைக்கும் 
வாழ்க்கைப் பட்டு
ஆயிரமாயிரம்  ஆண்டுகளாய் 
அடிமைத் தொழிலுக்கு ஆட்பட்டு 
பந்தங்களில் பரிதவித்து பதறிச்  
சிதறும் பெண்மையே...
இன்றளவும் விழியிருந்தும்
குருடாய் உன் பார்வை...
ஆயிரம் கைகளில் ஆதவன் 
மறைந்தே போனது இங்கே ...
ஆரியனின் சூழ்ச்சியில் 
வீழ்ந்தது பேதையவள் எழுச்சி...
எனினும் விண்மீன்களை 
போலவே சொலிக்க மட்டுமே 
இங்கே பெண்மையின் தேடல்....
இந்நிலை மாற்றம் வருமோ !
பாரதியின் வாய்மை பலித்திடுமோ !
எம் தமிழ்க்குலம் கண்ட 
மறத்தமிழச்சியை மாறாமல் கண்டிடுவேனோ....