எம் தேசத்து
ஆற்றங்கரைகள் போலவே
எம்மக்களும் காய்ந்த
நிலையிலே..
படுகையின் பள்ளங்களில்
தேங்கும் நீரும்
நதிகளில் காணமல்
போனதே....
அழிவில்
முதற்கண் மொழி
வழிமொழியும் இனம்
பின் தொடரும் இயற்கை...
வீழ்வதற்கு ஒன்றுமில்லை
இனி எழுவதற்கு
வானம் மட்டுமே எல்லை...
மொழி வாழ யாழ் மீட்டு
இனம் வாழ வாள் தீட்டு
நிலம் வாழ ஏர் பூட்டு...
சிந்தையில் செய்வதறியா
நிலைக் கொண்டால் ! எம்மினமே
சத்தமில்லாமல் மடிந்து போவாய்...
நிலைமாறும் முன் நிலைமாறு...