நாடென்பார் ; நீதியென்பார்
நடுநிலையில் அமர்ந்து நான்
நல்லவ னெனஉரைப்பார்...
உள்மனதில் வஞ்சம் வைப்பார்
அதில் தீரா வழக்கொன்றை துவக்கி வைப்பார்...
பகுத்தறிவு பேசிடுவார் ;
பல்லிளித்து சிரித்திடுவார் : நம்பியோரை
நட்டாற்றில் நிறுத்திடுவார்...
தனித்து தன்னை காட்ட
இனத்தை முன்னிருத்துவார்....
இவர்களையே தலைவரென
எம்மக்கள் கொண்டாடிடுவர்....