என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 31 ஜனவரி, 2013

தேசம் என்னடா

தேசம் என்னடா தேசம் 

தேடிப்பாரடா அதில் நேசம் 
இல்லையென்று சொல்லைத் 
தவிர இருக்காது அவனிடம்...
தொல்லை என்றுநினைத்திடுவான் 
தமிழ்ப்பிள்ளை என்றால் 
சிரித்திடுவான் எள்ளி நகைத்திடுவான்...
ஆற்றுநீரை அணைக்கட்டி தடுத்திடுவான் 
எம்மக்களை எலிக்கறி உண்ண 
வைத்திடுவான்...
வேற்றுமையில் ஒற்றுமைக்கு 
உலை வைப்பான்..சனநாயகத்தை 
சடுதியில் மறந்திடுவான்....இனி 
நிகழாது மாற்றம்...
நிகழ்ந்து விடும் ஏமாற்றம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக