எங்களில் சாதியுண்டு
சண்டையுண்டு
மதமுண்டு
மோதலுமுண்டு
பிரிவினைகள் பலவுண்டு ,
நிச்சயம் சொல்கிறேன் கேள் இந்தியனே !
எங்கள் பிரிவுகள் பாதியிலே தவிர
ஆதியிலே அல்ல ,,,
தமிழச்சியின் தவப்புதல்வர்கள்
நாங்கள் தமிழர்கள்....
துண்டாடிக் கொண்டாடி விடலாம்
எண்ணிவிடாதே ..
பாரதத்தின் பாதம் நாங்கள் ...
நாங்கள் சற்றே அசைந்தால்
பாரதம் கவிழும், தேசம் உடையும்...
நிலைகுலைந்து போகும் முன் யோசி...
எங்கள் ஈழத்தில் தமிழ் தேசியக்கீதம் வாசி....