என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 26 செப்டம்பர், 2012

காதல்..

உயிர்கள் உலா வரும் 

உயிரோட்டம்..

இளசுகளுக்கு மட்டும் உறவல்ல 
காதல் .....

உறவுகள் 

அனைத்தும் உணர்வு பெரும் இந்த காதலில்...

ஒளி பெரும் இருள் கூட...

ஒலி தரும் நீரோடை போல...

இனிமை தரும் தனிமைக்கு....

வளமை பெரும் முதுமைக்கு...

எண்ணிலடங்கா ஆசைகள் கூட 

முற்று பெரும் மனித காதலில்...

காதலில்லா வாழ்வு 

கல்லை தின்று செறிவு கொள்ளும் நிலையாகும்...

திங்கள், 3 செப்டம்பர், 2012

திருமணம்...


முடிந்து வைத்த சேலை வேட்டியில் 
துவங்கும் பந்தம்....
பந்தங்களை தொடர சொந்தங்கள் 
கூடும் தருணம்..
தருணங்கள் உருவாகும் புதியதொரு 
உலகிற்கு...
உலகறியும் உன் சுயத்தை இனி
ஈருயிர் கூடுதலில்...
கூடுதலில் உருவாகும் மனதில் 
புதிய சிறு சலனம்...
சலனமே வாழ்கையென்றால்
தோன்றுமே ஊடல்...
ஊடலை வென்றால்  வாழ்கையில் 
கிடைக்கும் தேடல்...
தேடலில் அமையும் உனக்கான  
அருமையான உறவு...
அப்பாற்பட்ட உலகு...
திருமணம்..
புரிதலில் வெற்றி...
இணைவதில் பெற்ற இன்பம் 
இறுதி வரை நிலைக்கும் 
இருவரின் மனதை ஒற்றி...

சனி, 1 செப்டம்பர், 2012

காத்திருப்பு...



வாழ்க்கையின் சுயநிலை விளக்கம் 
அறியும் நேரம் இது....
காத்திருப்பின் காலம் 
வீணானது அல்ல..மூளையின் 
முனையை தட்டி விட்டு செல்லும்...
முடிந்து போனதை சிந்திப்பதை தவிர்க்கும்...
வருவதை எண்ணி சிந்தித்திருக்கும்..
காத்திருப்பின் பின்னணியை 
சூழ்நிலை முடிவெடுக்கும்..
மாணவனுக்கு தேர்வு
காதலர்களுக்கு சேர்வு
மணமானவருக்கு சனன வரவு....
ஒட்டு மொத்த உறவுகளின்
எதிர்பார்ப்பின் உண்மை நிலை 
சீவராசிகளின் பருவ நிலை...
இந்த காத்திருப்பு...