என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 12 நவம்பர், 2011

தன்மான தலைவா !!!

தன்மான தலைவா !!!

தலைவா ! எம் தலை சாயும் வரை உனையன்றி யாதொருவரையும் ஏற்க மாட்டேன் தலைவனென்று !!

தலைவா ! நீ பிறந்த கார்த்திகை மாதம்தான் தமிழர்களின் தன்மான மாதமாக ஏற்போம் சபதமென்று !!

தலைவா ! வானில் பறவை பறக்க கூடவே தமிழனின் மானமும் பறக்க ! கொடியில் புலியை பறக்க செய்த உனக்கு நன்றிகள் நிறைவன்று  !!

தலைவா ! பூலிதேவனையும் கண்டதில்லை ,வங்கத்து சிங்கத்தையும் கண்டதில்லை !உன்னை கண்டோமே இந்நூற்றாண்டு கண்ட மாவீரன் என்று !!

தலைவா ! நீ மாண்டு போனதாய் மடையர்கள் மகிழ ! அந்த விலைமகளின் மகன்களுக்கு தெரியாது போலும் மரணிக்க நீ மனிதனன்று!!

தலைவா ! தமிழ்தேசம் கொண்ட மாசற்ற தங்கமே !தரணியில் உன்னை போல் வேறொருவன்  இல்லை! வந்து விடு உனையன்றி வேறு கதியன்று !!

தலைவா ! சத்திரியனுக்கு சாவில்லை !மாவீரம் மறைவதும் இல்லை ! சட்டென்று வந்து விடு தலைவா !உலகுக்கு உரைப்போம் நாம் யாரென்று !!

திங்கள், 24 அக்டோபர், 2011

இனாம் தமிழன்


இனமான தமிழன் இருந்த காலம் போக இனாம் தமிழன் உருவெடுத்த மாயம் என்ன ..

வெற்றி சரித்திரம் படைத்த தமிழன் வெந்த சோற்றின் மீது பற்றுண்டு தரித்திரம் கொண்டதென்ன..

பகட்டில்லா பண்பாடு கொண்ட தமிழன் பகட்டிற்காக மானமிழந்து போனதென்ன ..

விஞ்ஞானமும் வியந்து போகும் மெய்ஞானம் கொண்ட தமிழன் தறிகெட்டு போனதென்ன..

வேங்கைக்கும் வியர்த்து போகும் வீரத்தமிழன் வரண்டு போய் வழுவிழந்ததென்ன ..

இனமே அழிந்தாலும் இன்னிசை கேட்டு இனிமையாக பொழுதை கழிப்பதென்ன ..

உயிரை கொடுத்து இனம் காக்க அவசியமல்ல சிறு உணர்வு மட்டும் கொண்டாலென்ன ..

உணர்வு கொண்டால் தமிழனை எதிர்த்து சீண்ட பல கயவன் நினைப்பானா என்ன ..

இத்தனை கூறும் பொழுதிலும் என்மேல் கோபம் கொள்ளும் தமிழனுக்கு உண்மை கசப்பதென்ன ..

போராட்டமே வாழ்க்கை என்பதல்ல போராடாமல் வாழ்கையே இல்லை புரியாமல் போனதென்ன..

இத்தனை  "என்ன "உபயோக படுத்திய பொழுதிலும் இந்நிலைமை மாற  பதில் கிடைக்காமல் போவதென்ன...

வியாழன், 20 அக்டோபர், 2011

தமிழர் கூட்டம்

மலேயா  தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது... கூலிவேலை செய்யும் கூட்டம்தான் தமிழர் கூட்டம்.....

இங்கிலாந்து முன்னாள்  பிரதமர் சர்ச்சிலின் கேலி பேச்சு..

நீங்கள் கூறும் அதே தமிழர்கள்தான் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் குரல் வலையின் ரத்தத்தை உறிஞ்ச போகிறது....


பசும்பொன் தேவர் மற்றும் நேதாஜி அவர்கள்  மறு பதிலடி கொடுத்தது மட்டுமல்ல மணிப்பூர் போரில் தமிழர்கள் தாங்கிய படை வெள்ளையனை சிதறடித்து விரட்டியது......

புதன், 19 அக்டோபர், 2011

தமிழா வாடா !!



சிலிர்த்தெழும் ஆழியென தமிழா நீயும் சீறி வாடா !!
உன் சீற்றத்தால் எதிரிகளின்  கொட்டமழித்து போடா

பசித்தாலும் புல்தின்னா புலியென புறப்பட்டு வாடா !!
உன் பாய்ச்சலால் தீமைகளை சுட்டெரித்து போடா

கட்டுக்கடங்கா காட்டாற்று வெள்ளமென திரண்டு வாடா !!
திரளாக நிற்கும் தடைகளை அடித்துக்கொண்டு போடா

போரென்றால் முன் நிற்கும் இனமென்று சொல்லி வாடா !!
எதிர்நிற்கும் பகைவனின் முதுகை புண்ணாக்கி போடா

தமிழன் போல் ஓர் இனம் இல்லை என்றே மார்தட்டி வாடா !!
அவனுக்கு இணையான ஒரு வீரனில்லை பார் அறியும் போடா !!.

என்றும் தமிழன்னையின் புகழ் ஒங்க கைகொடுக்க வாடா !!
இதை தடுக்கும் தறுக்கர்களின் கரம் கொய்து போடா

தமிழீழம் மட்டுமல்ல தமிழன் இருக்கும் இடமெல்லாம் கொடி நாட்டுவோம் வாடா !!
சாத்தியமாக்குவோம் இதை தலைவன் காட்டிய பாதையில் நில்லாமல் போடா

சாதி மதம் எதுவாயினும் தமிழனாய் ஒரு வட்டத்தில் வாடா !!
வட்டத்தின் அரணாய்  நீயும் நெருப்பாயுதம் ஏந்தி போடா .......

நம் இனம் காக்க உயிரே மயிரென வாடா !!
மரணிக்கும் தருவாயிலும் தமிழ்ப்பேசி  உயிர் விட்டு போடா..


அன்புள்ள தமிழ்ப்பெண்ணே !!!


முறத்தால் புலியடித்த வீரத்தமிழ் வம்ச பெண் நீயம்மா !

படைநடத்தும் வீரனையும் வழி நடத்தும் ஆற்றல் உனக்குள்தானம்மா !

முண்டாசு புலவனும் பாடி வைத்தானே ! நீதானே புதுமை பெண்ணம்மா !

எப்போதும் மறவாதே தமிழன்னையும் உன்வழி தோ
ன்றலம்மா !

நம் இன பெருமையை பேணிகாப்பது உன் கடமையம்மா !

பண்பிற்கும் பண்பாட்டுக்கும் இவ்வுலகில் உனக்கு நிகர் ஏதம்மா !

தேடினாலும் கிடைக்காத தேனாமிர்தம் நம் தாய் தமிழ் மொழியம்மா !

தாய்மொழியும் தமிழினமும் உன் இருவிழிகள் தானம்மா !

உன்னை போற்றிப்பாடாத சித்தனும் இல்லை கவிப்பித்தனும் இல்லையம்மா !

உன் சுயமறிந்து உன் புகழறிந்து நீயும் உனை உணர்ந்து கொள்ளம்மா !

உனை உணராமல் மதிமயங்கி செல்கிறாயே மேற்கத்தி திசையம்மா !

மதிமயங்கி சுயம்மறந்து உன் புகழழிய காரணம் நீயேதானம்மா !

இயக்குவதும் இயங்கவைப்பதும் அனைத்தும் உன் செயல்தானம்மா !

மதிகெட்ட மடையர்களின் சொல்கேட்டு உன்னை உனக்குள் வைக்காதே சிறையம்மா !

முப்பத்திமூன்று என்ன ! முழுவதையும் உனக்கே தருகிறோம் பாரம்மா !

அதற்க்கு தடையாக இருப்பது நீ கொள்ளும் பெரும் மனதயக்கமம்மா !

அஞ்சுவோர்க்கும் தயங்குவோர்க்கும் எதுவும் அசாத்தியம்தானம்மா !

அசாதாரணமானவள்  நீயல்ல ! புரிந்துகொள் நீயும்  மறதமிழ் பெண்ணம்மா !

கலங்காதே என்றும் இந்த தன்னிகரில்லா தமிழன்  உன்பக்கம் துணையம்மா !

செவ்வாய், 18 அக்டோபர், 2011

எவரும் இருக்க முடியாது.....

 முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.....

காதல் கொள்ளுங்கள்

காதல் கொள்ளுங்கள்
அவதாரங்கள் எடுப்பீர்
உணர்வுக்குள் அழகை உணர்வீர்
மொழியின் மேல் காதல் கொள்வீர்
இன்னொரு இதயம் உருவாகும்
அதுவும் சிறகு விரிக்கும் !

கனவுக்குள் கனவு மெய்ப்படும்
ஐம்புலன்களும் சிரிக்கும் அழும் !
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !

எந்த வயதிலும் சிலிர்ப்பை சுகிப்பீர் !
விழித்து இருக்கையில் கனவுகள் விளையும்
உறக்கத்தில் உயிர்ப்பறவை சிறகடிக்கும்
உயிர் பிரிந்திடும் வேளையிலும்
இனிமை கொட்டும் !

சமூக சிறைகளை உடைத்திட சக்தி கொள்வீர் !
முகங்களை தெளிவீர் !
சிந்தைக்குள் மயக்கம்
செலவின்றி நிலாப்பயணம் செல்வீர்

ஆகாயத்துள் பறந்து வர அவசர சிறகு
பனித்துளிக்குள் இனிய பிரவேசம் !

விழி இமையில் புல்விரிப்பும் பூந்தோட்டமும்
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !

மனம் வானமாய் விரியும்
விழிப்படலத்துள் மேகம் மிதக்கும்
தேகம் சிலையாகும்
சிலை தேகமாய் சிலிர்க்கும் !

மௌனம் கூட ஆர்பரிக்கும்
வாழ்வின் முரண்கள் அரண்களாகும்
துயரிலும் இதயம் பஞ்சாகும் !

ஆதலினால்
வேண்டி நிற்பீர்
ஒரு வரம் - அடுத்த பிறவியிலேனும்
பிறந்திட வேண்டும் ...
" ஒரு தமிழனாய்" என ...

ஆதலினாலே ...

தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் ! தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அய்யாவின் நூற்றிநான்காவது அவதார திருவிழா..

அய்யாவின் நூற்றிநான்காவது அவதார திருவிழாவிற்கு இந்த சிறுவனின்  சமர்ப்பணம்...

உதயமும் அஸ்தமனமும் ஒரே தினத்தில் நிகழ்ந்த அற்புத மனித சூரியனே !

அடங்கா வேங்கை கூட்டத்தை அன்பால் அடக்கி போன மனித தெய்வமே !

அழுதாலும் தொழுதாலும் இனி கிடைக்காது உன் போல் அரிய பொக்கிசமே !

நின் பாதம் மட்டுமல்ல ! நீ உதித்த திசை நோக்கி வணங்கி தொழுவோமே !

உன்னை கண்டு வியந்து போனான் வங்கத்து மைந்தனே !

நீ சுற்றிய சிலம்பில் சிதைந்து போனது சிறுநரி கூட்டமே !

தேசம் எனது சுவாசம் எனதுரைத்த எம் தமிழகம் கண்ட தங்கமே !

விவேகமுள்ள உனது வீரத்திற்கு நிகரில்லை காட்டு சிங்கமே !

நீ இன்று  இருந்திருந்தால் பெற்றுருப்போம் தனி ஈழமே !

அய்யா நின் பொறுமைக்கு இணையில்லையே கடல் ஆழமே !

தீண்டாமைக்கு முதன் முதலில் இரும்புக்கரம் தொடுத்த மனித நேய மாந்தனே !

தமிழனுக்கும் வீரம் ! தன்மானம் உண்டு !என  உன்னை கண்டு உணர்ந்தான் வெள்ளையனே !

அறம் காத்து ! வீரம் விளைத்து தேசியம் காத்த செம்மலே !

உன்னை நேரில் கண்டிருந்தால் எங்களுக்கு கிடைத்திருக்கும் இப்பிறவி பாக்கியமே !
நீ விட்டு போன பணியை தவறாமல் செய்து முடிப்போம் !!!! "" இது உன் மேல் சத்தியமே""


அன்புள்ள சகோதரனுக்கு !!!


தம்பி நீ இருக்க எமக்கு முப்படை எதற்கு !
 
என்றும் நான் இருப்பேன் பக்கத்துணை  உனக்கு ! 
 
அடங்கா அரிமாவின் பெருங்சக்தி உனக்குள் இருக்கு !
 
உன் சக்தி கொண்டு அகிலத்தை உன் சட்டைப்பையில் போட்டு சுருக்கு !
 
எதிர்த்து எமன் வந்தாலும் அடித்து நொறுக்கு !
 
அலைபாயும் உன் மனதை வெற்றி பாதையில் திருப்பு !
 
வெற்றி பாதையில் சிறுநரிகள் வந்தால் நீயும் வைத்துவிடு நெருப்பு !
 
நல்லவன் போல் நடித்திடும் துரோகி நாய்களின் வாலை ஓட்ட நறுக்கு !
 
எந்த நிலை வந்தாலும் ஏற்றாதே உன் தலையில் ஆணவ செருக்கு !
 
எக்காரணமும் பெண்ணை தூற்றாதே ! உனக்கு பிடித்துவிடும் கிறுக்கு !
 
உன் அளவில்லா அன்பை கொண்டு உறுதியான இரும்பையும் உருக்கு !
 
அறிவாயுதம் கொண்டு உன் சுற்றத்தின் வளம் பெருக்கு !
 
புறங்காட்டா வீரமும் ,பெருங்கருணையும் நீயும் கொண்டால் அதுவே உன் சிறப்பு !
 
கலங்காதே எதற்கும் ! அசாதாராணமானது உனது பிறப்பு !
 
எடுத்து காட்டாக இருக்க வேண்டும் சரித்திரத்தில் உன் இறப்பு !
 
தலைவன் சென்ற வழி கண்டு தனி தமிழீழம் பெறுவது உன் பொறுப்பு !
 
எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு கிட்டாதே தமிழனாக பிறக்கும் 
வாய்ப்பு !
 
தயங்காதே ! இந்த தன்னிகரில்லா தமிழன் என்றும் உன் பக்கம் 
இருப்பு.....!!!!!!!!!!!



ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நவீன புரட்சியாளர்கள்

புரட்சியாளர்கள் என்ற போர்வைக்குள் வெறும் வறட்சியாளர்களே அதிகம் இணையத்தில் ..
வறட்சியான சிந்தனைக்கு இவர்கள் போற்றி கொள்ளும் போர்வை புரட்சியாளர்கள் ..

சொன்னானே " சே " என்ற புரட்சியாளன் சாகும் தருவாயில் என்னை சுட்டு விடுங்கள் என்று..
இவர்கள் செய்வார்கள் புரட்சி இணையத்தில் அமர்ந்து வாயில் கண்டதை மென்று !!
இவர்கள் செய்யும் வறட்சி !! மக்களை கொண்டு போகாதே நல்ல வழியில் சென்று !!
இவர்கள்  ஒற்றை சிந்தனையுடன் கூடி  "நல்ல மனிதர்களை சாடி பிழைப்பார்களே" இன்று !!
இவர்கள் ஏமாற்றமடைந்த மனதின் கழிவுகளை கொண்டு வந்து கொட்ட இணையமே அன்று !!
இனியும் பொய்யாக தோற்றமளிக்கும் கொள்கைகளின் பின் சென்றால் செய்து விடுமே மக்களை கொன்று !!
புரட்சியாளனுக்கும் வறட்சியாளனுக்கும் அடையாளம் கண்டு நம் இனத்திற்கு இருப்போம் அரணாய் நின்று !!

உலகம் உங்கள் கையில்

கரங்களை உரங்களாக கொண்டு உழையுங்கள்                                                                                                                                           ....உலகம் உங்கள் கையில்

பதிப்பகத்தாரை போல அவ்வபோது
புதுப்பித்து கொள்ளுங்கள் உங்கள் நினைவுகளை
                                                                              ....உலகம் உங்கள் கையில்

தன்னம்பிக்கை கூட்டங்களுக்கு  தவறாமல்

எடுத்து செல்லுங்கள் உங்கள்  அவநம்பிக்கைகளை                                                                                                                                 ...உலகம் உங்கள் கையில்

இழப்புகளுக்காக ஒரு இடத்தை எப்பொதும்

ஒதுக்கி வையுங்கள் உங்கள் இதயத்தில்                
                                                                             ....உலகம் உங்கள் கையில்

மனித நேயம்

அன்பைக்  கடந்த ஆண்டவன் இல்லை 
பண்பை வென்ற பக்தியும் இல்லை 
மனித நேயத்தை கடந்த மனித வாழ்க்கையும் இல்லை 
இப்பூவுலகில் நாம் வாழும் சின்ன இடைவெளியில் 
அன்பை விதைத்து ஆனந்தத்தை அறுவடை செய்வோம் 
பண்பை பகிர்ந்து கொண்டு பாசத்தை வளர்ப்போம் 
மனித நேயத்தை வளர்த்து மகத்தான சமுதாயம் படைப்போம்....

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஆற்று நீர்

சில மனிதர்கள் தனக்குதானே  பாதை  வகுத்து கொண்ட மாதிரி தன்னையே  சித்தரித்து கொள்கிறார்கள்.....
அனைவரிடமும் இருந்து முற்றிலும் தன்னை மாறுபடுத்தி முயற்சி செய்து தன்னை தானே ஏமாற்றி கொள்ளவும் செய்கிறார்கள்...
ஒரு உண்மையை மறந்து விடவும் செய்து விடுகிறார்கள்,,,

மனிதனும் ஆற்றுநீரும் ஒருவகையில் ஒன்று பட்டதுதான்...
ஆற்றுநீர் தனக்கென்று  வகுக்க பட்ட பாதையில் சென்றால்தான் உழவுக்கும் நல்லது !!! ஊருக்கும் நல்லது !!!
அது தன் பாதையை மாற்றி கொள்ள முற்பட்டால் நடக்கும் விபரீதம் போலதான் !!! மனிதனின் தான்தோன்றி தனமான முற்போக்கு சிந்தனை செயலும் !!!

புதன், 28 செப்டம்பர், 2011

கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா


பெண்களுக்குச் சொல்லுகின்றேன் அன்பு செய்து


பெருமையுடன் மனித குலம் காத்து நிற்கும்

வண்மை கொண்ட நீங்கள் இங்கு அடிமையாக

வாழுவதில் நியாயம் இல்லை புரிந்து வாழ்வீர்

உண்மை இல்லாக் கணவனையும் உவந்து போற்றி

உயர் வாழ்க்கை வாழ்வது வாய்ப் போலி செய்து

கண்மணியாய் அவனையுமே காத்து நிற்கும்

காவியத்துப் பெண்கள் அல்ல !! 

உயிர்கள் நீங்கள்


உங்களுக்கும் உடல் உண்டு !! உணர்ச்சி உண்டு !!

உள்ளுக்குள் எத்தனையோ ஆசை உண்டு

தங்களையே புரியாத தடியரோடே

தான் வாழ்தல் நெறி என்ற மடமை தன்னை

புண்களைப் போல் கொண்டு நீரும் வாழ்ந்திருத்தல்

பொய் மடமை கோழைத்தனம் புரிவீர் நீரே

கண்கள் என்று உம்மை இங்கு புரிந்து கொள்ளா

கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா....

சுதந்திரம் என்பது மஞ்சமா


சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம்


சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா?

வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம்

வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா?

சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில்

ஆயுதம் ஏந்தி ப்போராடினோம்

சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை

சூழ்ந்த பகைவரை சாடினோம்!

வீரர்கள் சாவது இல்லையே -விழி

நீரினை சிந்தாதே அன்னையே

போரில் மடிவதை எண்ணியே -தமிழ்

போராளி மகிழ்வது உண்மையே!

அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி

மேலொரு துயரில்லை உனக்கம்மா

அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன்

அரணாய் இருக்கிறான் பாரம்மா!

புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு

போதும் புசிப்பது இல்லையே

உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம்

உரிமைகள் கைவிடார் உண்மையே!

எதிரியே நமக்கு உதவி செய்பவன்.....

எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுகிறான். 

நம்முடைய திறமைகளை கூர்மைப்படுத்துகிறான். 

ஆதலால் நமது எதிரியே நமக்கு உதவி செய்பவன்.....

பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை



பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். 

அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். 

பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

தமிழா நீ இன உணர்வு கொள்வது எப்பொழுது ?



ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது! உலகமே இப்படி இருக்கும்போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்????

திங்கள், 26 செப்டம்பர், 2011

வீரம்


                                                       வீரம் 
""வீரம் என்ற குணம்தான் எதிரியும் தன்னை மெச்சும் படியான செயலை செய்யும் !!!
கோழைத்தனம் அவ்வாறு செய்யாது"" ------தேவர் அய்யா 

நமது வீரம் பகைவரை நடுங்க செய்யும் !!!அவன் படைகளை தூள்  தூளாக்கும் !!!

நமது தன்மானத்தை காத்து நிற்கும் !! நம்மை தகுதியோடு வாழ வைக்கும் !!!

நமது வீரம் அடுத்தவரின் பயத்தை போக்க வைக்கும் !! நம் பலத்தை காட்ட வைக்கும் !!!

வீரம் நம்மை மண்ணிலே புதைத்தாலும் !! மக்கள் மனதில் விதைக்க வைக்கும் !!!

ரத்தம் குடிக்கும் புத்த பூமியே !!!!!!!

ரத்தம் குடிக்கும் புத்த பூமியே!

தாய் தமிழகத்தில் இருந்து மானங்கெட்ட தமிழன் எழுதுகிறேன்......

எங்கள் உயிரென்ன நீ மழித்துவிட்ட மயிரென்று நினைத்தாயோ?

சாவு எம்மினத்திற்கு புதிதல்ல !


நாங்கள் செத்து செத்தே சரித்திரம் செய்தவர்கள்.....


பதறாதவர்கள் கூட சிதறிப்போவார்கள்.....


எம் ஈழ நாட்டு ஓலம் கேட்டு......


இந்த ஐ.நா என்ன......அந்த ஆண்டவனே அழுதுதான் போனான்.....


அங்கே நடந்த பூலோக மாற்றம் கண்டு......


"ஒருமுறை பிறந்தவனெல்லாம் ஒரேமுறை செத்துப்போகிறான்"


திரும்பவும் படி மேலே சொன்னதை......!!!!!!!!


பாவம் எம் தலைவன்..... பிறரைப்போல ஒருமுறைதான் அவனும் பிறந்தான்.....


ஏய் சிங்கள நாயே!!


நீ இன்னும் எத்தனை முறைதான் அவனை சாகடிப்பாயோ தெரியாது......


திரும்பி வருவான் உனக்கு புரியாது!!!!


"தமிழீழம்"
என் தாத்தன் காலத்து கனவு.......
என் தகப்பன் காலத்தில் நிலவு......
என் தலைமுறையில் விழுந்த எழவு......
இனிமேல்தான் தெரியும் விளைவு......


உலக சமுதாயமே இதை கேள்!!!!!
என் பிள்ளைக்காலத்தில்.....


இனி மே மாத விடுமுறை கழிக்க செல்வோம் தமிழீழ தேசம்!!!!


அங்கே உயரே பறக்கும் புலிக்கொடி......


உள்ளே வீற்றிருக்கும் விடுதலை புலி.......


வணங்கிவிட்டு வருவோம் விதிமுறைப்படி !!!!


ஈழ தேச விடுதலைக்காக உயிர் துறந்த போராளிகளையும்,எம் தாய் வழி சொந்தங்களையும்



பாதம் தொட்டு வணங்குகிறேன்.!!

இழப்பதை இழந்தாச்சு .........இனி ஈழப்பாதை எமதாச்சு........ 

                                   
                                                                           வெளியீடு..பாசறை பிரகாசு 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

எண்ணமும் செயலும்

எண்ணமும் செயலும் ஒரே நேர்கோட்டில் அமைக்க முயற்சியுங்கள் ....

எண்ணுவதை செயல் வடிவம் கொண்டு செய்து முடியுங்கள் ....
 

இல்லையெனில் செய்ய முடிந்ததை எண்ணங்களாக மாற்றி கொள்ளுங்கள் ....

இது தவறும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையின் அமைதி பறிபோக கூடும்....


இலக்கு இல்லாத அதிபல திறமை இருந்தென்ன லாபம்..

இது மகா பாரதத்தில் நடந்த சம்பவம் ..

பாரத போர் உச்சக்கட்டமாய் இருந்த நேரம்..போரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடியாத நேரமது.....
பகவான் சிறி கிருட்டினர்  இதை பற்றி ஆழ்ந்த சிந்தனை கொண்டிருக்கும் நேரத்தில் அவ்வழியே மகா பலம் பொருந்திய ஒரு வீரன் சென்று  கொண்டிருந்தான்..கிருட்டினர் அவனை அழைத்து அவனை பற்றிய விவரம் கூறுமாறு வினவினார்..
அவன் தான் ஒரு மாபெரும் வில்வித்தை காரனென்றும்  ..ஒரே அம்பில் பல நூறு பேரை கொள்ளும் சக்தி  படைத்தவன் என்றும் பெருமை பட கூறினான்,,கிருட்டினரும் அவனை பரிசோதிக்க வேண்டி அவனை அவன் திறமையை தன்னிடம் காட்டுமாறு பதிலுரைத்தார்..
அவன் உடனே ஒரு மரத்தை காட்டி ஒரே அம்பில் இந்த மரத்தில் உள்ள அத்தனை இலைகளையும் கொய்து காட்டுகிறேன் என்று சவால் விடுத்தான்..அதற்குள் கிருட்டினர் அம்மரத்திலிருந்து இரு இலைகளை கீழே விழ செய்து தன் காலுக்கடியில் மறைத்து கொண்டார்..அவனும் அம்பை எய்தான்..

அவ்வம்பு மரத்திலுள்ள அனைத்து இலைகளையும் கொய்து முடித்து கிருட்டினரின் காலுக்கடியில் பாய்ந்து கீழே உள்ள இலைகளையும் கொய்து முடித்தது..
அவனின் வில் வித்தையை கண்டு  கிருட்டினருக்கோ மகா ஆச்சர்யம் ..அவனை பார்த்து நீ யார் பக்கம் போர் புரிய போகிறாய் என்று கேட்டார்..

 அதற்கு அவனோ எனக்கு பாண்டவர் ,கௌரவர்கள் இரு அணிகளில் எந்த அணி தோல்வி நிலையை நோக்கி செல்கிறதோ அந்த அணியின் பக்கம் சென்று விடுவேன் என்றான்..
அதற்கு கிருட்டினர் இரு பக்க தோல்வி நிலைக்கும் நீ போரிட்டால் எவ்வாறு போர் முடிவடையும் என்று சொல்லி முடிக்கும் முன்,,
அவன் கூறினான் அது எனக்கு தேவையில்லை என் திறமையை காட்டுவதே என் வேலை என்று இறுமாப்புடன் கூறினான்..
 
கிருட்டினர் உடனே தனது விசுவரூபம் காட்சி அளித்து அவனுக்கு தான் யார் என்பதை உணர்த்தி அவனிடம் ""உனக்கு அதிபல திறமை இருந்தாலும் உன் திறமை சரியான ஒரே திசையில் வழியில் செல்ல வில்லையெனில் அது உனக்கும் உலகுக்கும் பிரயோசனம் இல்லை ""என்று உணர்த்தி அவனுக்கு சொர்க்கலோக பதவி அளித்து மோட்சம் அடைய செய்தார்,,,

இலக்கு இல்லாத எந்த ஒரு சக்தியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு ...


சனி, 24 செப்டம்பர், 2011

பகை வெல்லுங்கள்

அம்பெடுத்து பகை வெல்வது ஒரு வகை ,,

அன்பெடுத்து பகை வெல்வது ஒரு கலை,,

எதிரியிடமும் அன்பை செலுத்துங்கள் ..  

எனினும் அம்பை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள் !!!!!!!

தேவையெனில் அம்பையும் செலுத்த தவறாதிருங்கள்   !!!!!

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

மீன்கள்


இறந்து போன மீன்கள்தான் தண்ணீர் போகும் வழியே போகும்,,
உயிருள்ள மீன்கள் தண்ணீரை எதிர்த்துதான் செல்லும்...
மீனகளுக்கே அந்த குணம் எனில் மனிதர் நமக்கு ???
நம்முடைய பிரச்சனைகளை போர் குணத்துடன் சந்தித்து வெற்றி பெறுவோம்..

தேடல்

நிறைய நேரங்களில் நாம் தேவையும் தேடல்களுமே வாழ்க்கை பயணத்தின் பல பக்கங்களை நம்மையும் அறியாமல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது..-எனினும் தேவையே இல்லை என தெரிந்திருந்தும் தேவையற்ற ஒன்றின் தேடலை மனம் தேடி கொண்டே இருக்கிறது !!!.......இனியவள் 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஆசைகளை அடக்க விட்டால் ஆபத்துகள் வரும்...

அந்த காலத்தில் ஆப்பிரிக்காவில் குரங்குகள் அதிகம் .அவை ஊருக்குள் புகுந்து தொல்லைகள் தரும்.அதனால் மக்கள் அவற்றை பிடித்து காட்டுக்குள் போய் விட்டு விடுவார்கள்..குரங்குகளை வேட்டையாடி கொல்வது எளிது .ஆனால் உயிருடன் பிடிப்பது சிரமம்.அவற்றை உயிருடன் பிடிக்க அவர்கள் ஒரு தந்திரம் செய்வார்கள்..
தேங்காயை எடுத்து அதில் சிறிய துளை போட்டு விடுவார்கள்..சிரமப்பட்டு ஒரு கையை நுழைக்கும் அளவுக்கு அந்த துளை இருக்கும்.துளைக்குள் கொஞ்சம் சோற்றை வைத்து விடுவார்கள்..
குரங்குகளுக்கு சோறு என்றால் மிகவும் பிடிக்கும்.தேங்காயின் ஒரு முனையை கயிற்றால் இணைத்து மறைவாக வைத்து விடுவார்கள் ..இது போன்று பல தேங்காய்களை அங்கங்கே போட்டு வைத்து விடுவார்கள்.
குரங்குகள் வரும் சாதத்தின் வாசனை அவற்றை இழுக்கும்.உடனே சாதம் இருக்கும் ஓட்டைக்குள் கை விடும் ,சோற்றை எடுத்து கையை கெட்டியாக மூடி கொள்ளும்,ஆனால் அவற்றால் அந்த துளை வழியே கையை எடுக்க முடியாது...காரணம் கையில் சோற்றை கெட்டியாக பிடித்திருப்பதுதான்.சோற்றுடன் மூடியிருக்கும் கையை திறந்து ,விரல்களை சுருக்கி அவற்றால் கையை வெளியே எடுத்து விட முடியும்.ஆனால் ,சோற்றின் மேல் உள்ள ஆசையால் அவை அப்படி செய்யாது.குரங்கு பிடிப்பவர்கள்  எளிதாக கையிற்றை இழுத்து குரங்குகளை பிடித்து விடுவார்கள்..
நம்முடைய அதிக ஆசைகள்தான் பிரச்சனைகளுக்கு காரணம்..தேவையற்ற ஆசைகளை புறக்கணிப்போம் .ஆசைகளை அடக்க விட்டால் ஆபத்துகள் வரும்...

அன்பே சொர்க்கம் ................


உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக்
கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்வொருவரும் மற்றவரைக் கொன்று
கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு சொர்க்கம் ஆகக்கூடிய இந்த உலகை நரகமாக
ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
அன்பு செய்யுங்கள்.
இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.


 வெளியிட்டது எனது தங்கை ....இனியவள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தேடல்


நான் ஏறி கொண்டே இருக்கிறேன் என் லட்சிய  சிகரம் தேடி ..

தோண்டி கொண்டே இருக்கிறேன் என் அறிவு புதையலை தேடி..

பெருங்கடலில் நீந்தி கொண்டே இருக்கிறேன் அமைதி தீவை தேடி...

வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் வாழ்கையின் அர்த்தம் தேடி..


நீங்கள் நீங்களாக இருங்கள்...........


இலட்சியத்தை அடைய தூக்கம் வராத கனவு காணுங்கள் .......
நீங்கள் நீங்களாக இருங்கள்...........
நம்முடைய எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன .......
தனித்தன்மை இருந்தால்தான் நாம் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்.....
நம்மை மற்றவர்களை மாற்ற போல இந்த உலகம் முயற்சிக்கும்.......
அந்த மாய வலைக்குள் சிக்காமல் நீங்கள் நீங்களாவே இருங்கள்...........

புதன், 14 செப்டம்பர், 2011

தமிழா!


தமிழா! உன் காலுக்கு கீழ் பதுங்கியுள்ளதடா பூமி 


நீ மேல் நோக்க வேண்டாம் வானை


அது கீழ் இறங்கி வரும் உனக்கு நேரே


உன் பார்வையில் உள்ளதடா நெருப்பும்


உன் சுவாசத்தில் உள்ளதடா அனலும்


உன் சுண்டுவிரலில் சாயுமடா தடைகள்


உன் தோளில் உள்ளதடா வீரம்


பெரும் புயலுக்கு ஒப்பானதடா உனது கோபம்


பெரும்படையும் சிதறுமடா அதைக் கண்டு


இந்த வையகத்தில் நமக்கு நிகர் நாமே


இந்த உலகத்தின் மூத்த குடியே !!!!!


நம்புங்கள்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் .

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

பாரில் தமிழ் மண் வீரம் படைக்கும் .

பகைவன் ஓடும் செய்தி கிடைக்கும்.

போரில் வெற்றி முரசு முழங்கும்.

புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்..


புது சரித்திரம்  தமிழினம் படைக்கும் .

என் தமிழன்னையின் புகழ் ஓங்கும் .

அதில்  என் மனம் மயங்கும் .

இது  நடக்கும் வரை என் இதயம் நில்லாது இயங்கும்.

நம்பிக்கை

பாறைகளின் இடுக்குகளின் 
முளைத்திருப்பது தாவரங்கள் அல்ல --------------தன்னம்பிக்கை 

தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல ----------உழைப்பு

கூட்டைப் பிளந்து வெளியே
வருவது குஞ்சுகளல்ல ---------------------------விடாமுயற்சி



செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இறைவன்

தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச் செல்வான் ஒருவன் — அவன்தான்
நாடகத்தை ஆட வைக்கும் இறைவன்....... கண்ணதாசன்.


பதறாமல் செய்யும் காரியம் சிதறாது..


"இது புத்தர் வாழ்கையில் நடந்தது .
ஒரு முறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு கிராமத்தை கடந்து கொண்டிருந்தார்கள் .அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம் .ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார்.அவன் தண்ணீர் எடுத்து வர அருகிலுள்ள குளத்துக்கு ஓடினான் .அங்கே குளக்கரையில் கிராமத்து வாசிகள் துணி துவைத்து  கொண்டிருந்தார்கள்.அதனால் குளம் கலங்கி இருந்தது,அதிலிருந்து தண்ணீர் எடுத்து போய் கொடுக்க சீடனுக்கு மனமில்லை.ஓடி வந்து புத்தரிடம் பார்த்ததை சொன்னான்.உடனே புத்தர் 'பரவாயில்லை சிறிது நேரம் கழித்து போய் எடுத்து கொள்ளலாம் ' என்று சொல்லி அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும் ,புத்தர் சீடனை அழைத்து மீண்டும் குளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வர சொன்னார்.சீடனும் குளத்துக்கு சென்றான்,குளக்கரை காலியாக இருந்தது,கிராமத்து வாசிகள் துவைத்து முடித்து சென்றிருந்தார்கள் .குளத்தில் கலங்கலும் அடங்கி தண்ணீர் தெளிந்து இருந்தது.சீடன் தெளிந்த தண்ணீரை எடுத்து கொண்டு புத்தரிடம் சென்றான்.
"ஒரு மணி நேரம் முன்பு பார்த்த குளம் போலவே இல்லை,மிகவும் தெளிந்து இருந்தது " என்றான் குருவிடம்.அதற்கு புத்தர் அவனிடம் ,
"மனித மனமும் இப்படித்தான் ,பதட்டத்தில் இருக்கும் பொழுது கலங்கியிருக்கும் .அந்த நேரம் நாம் எந்தக் காரியமும் செய்ய கூடாது.சிறிது நேரம் அமைதியாக இருந்தால் மனம் தெளிவடையும்.அப்பொழுதுதான் நம் பணிகளை செய்ய வேண்டும்" என்றார்..  

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது..

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இந்த மாமனிதரை யாரென்று நினைவுள்ளதா !!!

ஜி.டி. நாயுடு (மார்ச் 231893 - 1974) என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.
நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் 
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் 
'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் 
அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!
இவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் 

புதன், 24 ஆகஸ்ட், 2011

தமிழன் வீரம்

வீரம் எங்கள் குல தொழிலடா !

போரென்றால் முன் நிற்கும் இனமடா !

பார்த்தாலே வீரம் பிறக்குமடா !

பார்வையில் பல அர்த்தம் இருக்குமடா !

பதுங்கி பின் பாயுமடா !

அண்டியோற்கு உயிரை கொடுக்குமடா !

எதிர்த்தோரின் உயிரை எடுக்குமடா !

குணத்தில் புலிகள் நிகரடா !

கூடி நின்றால் புரட்சி வெடிக்குமடா !

குள்ளநரி கூட்டத்தை ஒழிக்குமடா !

நாம் ஒன்று சேர்ந்தால் பூகம்பம்தானடா !

நம் இனத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதடா !

வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை .




மரணத்தை கண்டு எல்லோருக்கும் பயம்.

எல்லா பயங்களும் மரணத்தில் முடிகின்றன .

ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை .

நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி 

அப்பொழுதைய அழுகை நமக்காகவே !!!!

பிரார்த்தனை கோவில்கள் மதங்கள் அனைத்துமே .

மரணம் மட்டும் இல்லையெனில் மறைந்து போகும் .

மரணத்தை புரிந்தவன் வென்றவனாகிறான்......

வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை .

பயம் கொள்ளாதவனுக்கு மரணமில்லை ."



தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!

தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!

அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!

தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!

அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!

தமிழே! நீயேஎன் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!

அமிழ்தே! நீதரும் இன்பம்....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?

தமிழே! இன்றுனைப் பழிக்கும்
தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்

அமிழ்தே! நீவாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!

தமிழே! உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!

அமிழ்தே உனைஎவன் தொட்டான்?
அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!

நிரந்தர பயணம்

நிரந்தரமான உறக்கத்தை நோக்கிய பயணத்தில் நான் !

இடையில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் ,

கண்ணீராக ,புன்னகையாக ,வலியாக !!

எல்லாம் அவன்(இறைவன்)செயலென நினைக்க முடிய வில்லை -

எனினும்

நினைக்கிறேன் எல்லாம் அவனவன் செயல்தானென்று !!!

உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்


  • உங்களை நீங்களே இகழாதீர்கள்
    அது கடவுளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம்!


  • உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்
  • அது கடவுளுக்குப் படிக்கிற பாராட்டுப் பத்திரம்!



  • உங்களைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள்
    அது உங்கள் தனித்தன்மைக்கு நீங்கள் செய்யும் அவமானம்!


  • உங்கள் பலங்கள் மீது கவனம் செலுத்துங்கள்
  • அது உங்கள் பலவீனங்களை வெளியேற்றும் ரகசியம்



  • உங்களுக்குப் பிடித்ததை விருப்பத்துடன் செய்யுங்கள்
    அது உங்கள் விசுவரூபதை வெளிப்படுத்தும் சாகசம்


  • உங்கள் மீதான விமர்சனங்களைப் பரிசீலியுங்கள்
  • அது உங்கள் வளர்ச்சிக்கு மற்றவர்கள் போடும் உரம்


  • உங்களை நீங்களே எடைபோடுங்கள்
  • அது உங்கள் வெற்றிக்கு நீங்கள் இடும் அச்சாரம்



  • உங்கள் குறைகளைக் களையுங்கள்
    அது அவற்றைக் கடப்பதற்கான முயற்சியின் அடித்தளம்


  • உங்களை நீங்களே நம்புங்கள்
  • அது உங்கள்மேல் கடவுள்வைத்த நம்பிக்கையின் அடையாளம்

  • சாதியை ஒழிக்க வேண்டும் கத்துபவர்களே

    சாதியை ஒழிக்க வேண்டும் கத்துபவர்களே !! உரக்க கத்துங்கள் இலங்கை நோக்கி !!
    தன்மானம் உள்ளவன் தமிழன் என்று பிதற்றுபவர்களே !! தமிழன் பிடரியில் கோடாலி வைத்திருப்பதை கவனியுங்கள் !!
    பகுத்தறிவு பேசும் அறிவாளிகளே !! உங்கள் அண்ணாகயிறு அவிழ்ந்து போவதை பிடியுங்கள் !!
    ஆன்லைனில் மட்டும் வீரம் பேசும் வீர தமிழர்களே !! உன் நீர்த்து போன வீரத்தை சிங்களனிடம் காண்பியுங்கள் !!

    தன் மானம் உள்ள தமிழர்களே !!! தமிழச்சிகளே !! வெட்டி விவாதத்தை புறக்கணியுங்கள் !!
    தமிழினம் போல ஒரு இனம் இல்லை !! தமிழன் போல ஒரு தரணியில் வீரன் இல்லை நிருபியுங்கள் !!
    சாதி ,மதம் ,கடந்து தமிழனை தலை நிமிர செய்குவோம் !! இதில் பிரிவினை செய்யும் புல்லுருவிகளை வேரோடு அழிப்போம்!!

    தன் மான தமிழன் எங்கே !!! இன்றைய தமிழனின் நிலைமைதான் என்ன !!! ?



    வந்தாரை வாழ வைத்து தான் வீழ்ந்து போனவன்.
     
    விட்டுக் கொடுத்தே வீணாகப் போனவன். 

    ஆண்டாண்டு காலமாக அடிமையாகவே வாழ்பவன்.

    இலவச  அரிசியை வாங்கிப் பொங்கி மாராட மயிராட நிகழ்ச்சி பார்த்து மல்லாந்து படுத்துறங்கும் மீப்பெரு நல்லவன்.

    வாக்களித்து வாக்களித்து வாழ்விழந்து போனவன்.எல்லாப் போலிகளையும் தவறாமல் நம்பி நம்பித் தடம் புரண்டவன்.

    தன்னுடைய வரிப் பணத்தில் தன்னையே அழிக்க ஆயுதங்கள் வாங்க அனுமதிக்கும் அருமையானவன்.

    ஒட்டு மொத்த உலகமும் இணைந்து தடைசெய்யப் பட்ட நச்சு எரிவாயு கொண்டு தமிழினம் ஒழிக்கும் போதும் தன்மை மாறாத தூயவன்.

    துள்ளி விளையாடும் பள்ளிக் குழந்தைகள் மீது கொத்தணிக் குண்டுகள் போட்டாலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரையாய் இருப்பவன்.

    பாலியல் வல்லுறவில் கிழிக்கப் படும் கன்னித்திரைகள் கண்டும் கலங்காதவன்.

    செவிலியருக்குப் பதில் வெடிகுண்டுகளே தமது உறவுப் பெண்களுக்கு மகப்பேறு பார்த்தாலும் மனம் குமுறாத மாமனிதன்.

    இப்படி என்ன கொடுமை நடந்தாலும் அவன் வேறு நாட்டவன் நாம் இந்தியர் என்று உணர்ந்து கொள்ளும் அறிவாளி

    அளவான தண்ணீர் கூடத் தராத பல மாநிலங்களுக்கும் அளவில்லா உதவி செய்பவன்.

    தமிழன் என்றோர் இனமில்லை தனியே அவர்க்கு நாடில்லை என்று செய்ய பேருதவி செய்தவன்.
    இன்னும் நீளும்... அடி வயிறு பற்றி எரிகிறது ......

    எல்லாவற்றுக்கும் மேலாக யார் தமிழன் என்ற வினாவை ஒரு தமிழனையே கேட்க வைத்தவன் 

    உணர்வாளன்

    ''வாழ்ந்தாலும் தமிழுக்கும் 

    தமிழர்க்கும் வாழ்வேன்!
    வளைந்தாலும் நெளிந்தாலும்
    தமிழ்பொருட்டே ஆவேன்!
    தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
    தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
    சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
    சூழ்ச்சியினால் பிரித்தென்றன்
    உடலையிருகூறாய்ப் போழ்ந்தாலும்
    சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
    புதைத்தாலும் எரித்தாலும்
    அணுக்களெல்லா மதுவே!”