என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 26 அக்டோபர், 2013

'வேலன், சோழன், ஈழன் '

சிந்திக்கும் 
போதே 
நிந்திக்கும் 
அதுதான் 
சரித்திரம்;
'அன்றோ' 
அதை 
படைத்திட 
நரம்பு 
புடைத்திட 
புசங்கள் 
துடித்திட 
வேல் கொண்டு 
நின்றவனே 
வேலன் ;
வாள் வீசி 
சென்றவனே 
சோழன் ;
துவக்கில் குறி 
வைத்தவனே 
ஈழத்து வீரன் ;
இத்துனையும் 
நீதான்...
'இன்றோ'  
கொட்டடி 
அடிமையாய் 
சோற்றுக்கு 
வாழ்வாயா !
உணர்வு 
கொள்வாயா !
சொல் நீ ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக