என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 8 நவம்பர், 2013

அச்சம் எதற்கடா...

திரண்டு வா
தமிழா !
மிரண்டு போவான்
எவனும் !
முற்றத்தில்
முடங்கினால்
நிகழாது மாற்றம்,
அச்சத்தில்
ஆர்பரித்தால்
அனாதையாய்
போகுமடா இனம்....
எழுஞாயிரை கைக்
கொண்டு எழுப்பு
பகைவரின் கொட்டத்தை
முடக்கு
இடறொன்று இல்லாமல்
நம்மினத்தை தொடக்கு...
நீதான் நானடா
நான்தான் நீயடா
பின்
அச்சம் எதற்கடா...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக