என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 12 டிசம்பர், 2013

எம் தேவன் !

பதினாறு பரி 

பூட்டி; முலாமிட்ட


தேரேறி ; நகைத்த


முகம் கொண்டு 


வருவான் 


எம் தேவன் !

காலனையும் அவன்


வடம் பிடிப்பான்;


என்னையும் அவன் 


தடம் பிடிப்பான்; 


என் குலம் காக்க


வந்த எம் அய்யனே ! 


நித்தம் பித்தனாய்


சித்தம் கொள்வேன் !


வாழ்வும் வளமும் 


இனி உன் வசமே தேவா !!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக