என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 31 மார்ச், 2012

வாளும் வேலும்....


வாள் வேல்  வீரம்
ஆதிதமிழர்க்கு
சொந்தமானது...
உயிர் கொல்லும்
உன்னத ஆயுதம்...
அடையாளமாய் இனத்திற்கு..
ஆதாரமாய் வீரத்திற்கு...
எடுத்தார் கைப்பிள்ளை போல
எவருக்கும் உதவும்....
நீதி செய்வதற்கு உருவெடுத்தது ...
எதிரிகளை களையெடுக்க..
உதிரிகளை பலியெடுக்க.....
நல்லோர் கைகளில் குடிகொண்டது..
காலமாற்றத்தில் கை மாறியது..
அநீதிகளுக்கும் துணை கொண்டது
தோட்டாகளில் தோற்றம் மாறியது
சட்டசிக்கலில் மாற்றம் கொண்டது
இனி காண இயலாது
வல்லவர் கையில்............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக