என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 16 ஏப்ரல், 2012

விதைகள் எழாமல் போகாது.....



உன் மொத்த அச்சத்தையும் அள்ளிக்கட்டு...
அடங்கா நரம்புகளை முறுக்கி கட்டு..
தமிழனாய் நிமிர்ந்து நெஞ்சை தட்டு..
வீரத்தில் உனக்கு இல்லை நிகரென
எதிர்ப்பவனை வெளுத்து கட்டு...
இந்தியன் என்ற சொல்லை விட
தமிழன் நான் என்று உலகமெங்கும் பறை சாற்று..
வீழ்ந்தது விருட்சமல்ல விதைகள்
விதைகள் எழாமல் போகாது.....
விண்ணை உடைக்காமல் நிற்காது......
தலைவன் பதித்த தடம் அழிந்து போகாது.....
தர்மம் மீண்டும் வெல்லும் பொய்யாகாது...
தமிழனுக்கென்று நாடொன்று உருவாகும்...
அதுவே எம் கொள்கையின் கருவாகும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக