என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 9 மே, 2012

விரல்களுக்குள் உலகம்....


விரல்களுக்குள் அடங்கி போனதே உலகம்....
இதற்குத்தானா  நமக்குள் இத்தனை கலகம்...
நண்பா ....
மீண்டும் பிறக்க போவது இல்லை உறுதி...
இனி சிந்தாமல் செய்ய வேண்டும் குருதி..
சிந்தையை விரித்து..
உலகை  உணர்ந்து....
வட்டத்துள் அடங்காமல்..
உணர்வை சுருக்காமல்...
உன்னை உனக்கே புரிந்து  வாழ்ந்திடு நண்பா....
நட்பை சிந்தி...
அன்பை தெளித்து...உறவுகளை வளர்த்திடு...
வம்பை குறைத்து...
வீரத்தை விதைத்து தீயோர்களை ஒடுக்கிடு...
சென்றதை செலவில்
வருவதை வரவில்
இருப்பதை கருத்தில் வைத்து...
சந்தோச சரக்கை மக்கள் சந்தையில் வைத்து....
நிறைவோடு வாழ்ந்திடு தன்னிறைவாக !!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக