என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

தைத்திங்கள்

எம் உயிர் மொழியே;
திகட்டாத அமிழ்தே;
தித்திக்கும் தேன் தமிழே !
நின் மாதங்கள்
பன்னிரண்டும்
எம் வாழ்க்கைக்கு
தொடக்கம்தான்...
"தைத்திங்கள்"
சித்திரைத் திங்கள்
எதுவாகினும்
நிற்கதி நீயே
என அறிவாயோ....
உன்னை மட்டுமே
அண்டியிருக்கும்
எம்மினத்திற்கு
நிறை வாழ்க்கை
வாழ்ந்திட அருளிடுவாயே
எம் தங்கத் தமிழே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக