என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஆதவனே !

இரவின் பிணிப்
போக்க பிறை நிலவும்,
இறவா நிலைப்
பெற இவ்வுலகும்,
இரவா நிலைக்
கொள்ள மானுடமும்,
உன்னிடம் யாசித்து
நிற்கும் அக்கினித் தேவனே !
ஆதாரங்கள்
அனைத்துமாய்
அக்கினியை
ஔடதமாய்
ஒளியாய் வீசும் ஆதவனே !
எம்மக்களும் மண்ணும்
பயனுற உன்னிடம்
நானும் யாசித்து நிற்கிறேன்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக