என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இடர்கள்

பட்டினிகளும்
பகைகளும்
ஒரு சேர
சூழ்ந்து நின்றவன்,

ஒரு கை
சோற்றுக்கலைந்தும்
மறு கையில்
வீம்பை பிடித்து
வாழ்ந்து வந்தவன்,

பரதேசியாய்
திரிந்த பொழுதும்
பரதேசம்
பயணித்தவன்,

அன்பு சகவாசம்
எத்தனை இருந்தும்
ஆயுத சகவாசத்தால்
உயிர் பிழைத்தவன்,

இடர்கள் எத்துணை
இருப்பினும் சரி,

ஒரு பொழுதும்
வீழ்ந்திடும் நிலை வாராது
என்னில் வாழும்
தன்னம்பிக்கை வீழும் வரை...

1 கருத்து: